Wednesday, April 7, 2010

புண்ணியம்

இறைவா..
புண்ணியம் தேட 
உன் ஸ்தலம் வந்தேன்..
எங்கே சென்று இருந்தாய்?
என்னை படைத்ததற்கு புணியம் தேடவா?

அயல் நாடு

கதிரவன் வெளிச்சம் போட்டு அநியாயங்களை காட்டியும் குழந்தைபோல் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது என்னால்..

வாழ்க்கை திரைப்படம்

மனம் குமுறும் போதும் 
சிரித்து நடிக்கும் இதழ்களே..
யாரிடம் பணம் வாங்கினாய் நடிப்பதற்கு?
இது என்ன வாழ்க்கை திரைப்படமோ?
தினம் உலகத்திடம் நடித்து வாழ..

தற்கொலை

தற்காலிக பிரச்சனைக்கு 
நிரந்தர தீர்வு காண்பது 
புகழதக்கது,
தற்கொலையாக இல்லாதவரை!