Thursday, July 28, 2011

காதலி

நான் சிரிக்க 
என் முகம் மலர ,
நூறு ரோஜாக்கள் பூக்கின்றது.

காலையில் நான் விழித்து 
கை அசைக்க 
சூரியன் வெளியே வருகிறான் 

நதியோரம் நான் நடக்க
மீன்கள் என்னை காண 
துள்ளிக்குதிக்க..

நீ யாரடி புதிதாய்,
என்னை ஈர்க்கும் காந்தமாய் ???

நான்

வாழ்கை எனும் ஆற்றில் ,
நிம்மதி எனும் படகில் ,
அமைதி எனும் துடுப்போடு ,
கடமை எனும் தோழர்களோடு ,
காலத்தை நோக்கி செல்கிறேன் நான்..

***(ஒன்பதாம் வகுப்பில் எழுதியவை ..)

வெள்ளம்


மழை பட படவென பெய்ய,
காற்று சல சலவென வீச,
மழை தட தடவென ஒழுக,
வெள்ளம் கட கடவென வீட்டினுள் வர
என் குடும்பத்தை மட மடவென விழுங்கிவிட்டது..

**(ஒன்பதாம் வகுப்பில் எழுதியது..)